Videos

விழுப்புரம் – மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | Unjal Utsavam

🌺🙏 Villupuram – Melmalayanur Sri Angalamman Temple Avani Amavasai Unjal Utsavam | விழுப்புரம் – மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 🙏🌺

✨🙏 பக்தி வெள்ளத்தில் மேல்மலையனூர் ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் – “கணேச ஜனனி” அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மன்.

விழுப்புரம் மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்திப் பெருக்கோடு வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு உற்சவத்தில் உற்சவர் அங்காளம்மன் *கணேச ஜனனி* எனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆவணி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை முதலே மேல்மலையனூர் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. நடை திறக்கப்பட்டதும் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், ஜொலிக்கும் தங்கக் கவசத்தாலும் அம்மன் பேரெழிலுடன் காட்சியளித்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணேச ஜனனி அலங்காரத்தில் தாயாகவும் சக்தியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்த அங்காளம்மனை ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.சர்க்கரைப் பொங்கல், சுண்டல் மற்றும் பல்வேறு பழங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.அதிகாலை முதலே நீண்ட நெடிய வரிசையில் பொறுமையுடன் காத்திருந்த பக்தர்கள், அங்காளம்மனின் திவ்ய தரிசனத்தை கண்டு மனமுருகினர்.நாள் முழுவதும் விரதமிருந்து இரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூரில் திரண்டனர். இரவு சுமார் 10.30 மணியளவில் பூசாரிகளின் பாரம்பரிய முறைப்படி உற்சவர் அங்காளம்மன் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது பூசாரிகள் பாரம்பரிய முறைப்படி தாலாட்டுப் பாடி தீபாராதனை காட்டினர். திரண்டிருந்த பக்தர்கள் கைகளில் நெய் தீபம் ஏந்தி *ஓம் சக்தி அங்காளம்மா* என பக்தி முழக்கமிட்டனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு *கணேச ஜனனி* அலங்காரத்தில் அங்காளம்மனை தரிசித்த பக்தர்கள் விநாயகப் பெருமானின் அருளும் அங்காள பராசக்தியின் அருளும் ஒருசேர கிடைத்ததாக பக்திப் பரவசத்துடன் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்காகவும்கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக முறையான தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தரிசனத்திற்காக வந்த பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோவில் உதவி ஆணையர், அறங்காவலர் குழுவினர், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர். ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற *கணேச ஜனனி* சிறப்பு அலங்கார தரிசனமும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.🙏✨

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : மேல்மலையனூர், விழுப்புரம்.
📅 தேதி : 11.09.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#மேல்மலையனூர் #அங்காளம்மன் #அங்காளம்மன்கோவில் #விழுப்புரம் #ஆவணிஅமாவாசை #ஆவணிஅமாவாசைவிழா #ஊஞ்சல்உற்சவம் #அம்மன்தரிசனம் #அம்மன்கோவில் #சிறப்புதரிசனம் #ஆன்மிகம் #ஓம்சக்தி #Melmalayanur #Angalamman #AngalammanTemple #Villupuram #AvaniAmavasai #AvaniAmavasai2026 #OonjalUtsavam #OonjalSevai #AmmanTemple #AmmanDarshan #TempleFestival #TempleUtsavam #Devotional #TamilDevotional #HinduTemple #DivineDarshan #OmShakti #ShaktiAmman

Related Articles

Back to top button
Close