திருவிடைமருதூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஷீரப்தி நாராயண பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
🌺🙏 Thiruvidaimarudur Sridevi Bhoodevi Sametha Ksheerabdhi Narayana Perumal Temple Maha Kumbabishekam | திருவிடைமருதூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஷீரப்தி நாராயண பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 🌺🙏
📝குறிப்பு :
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஷீரப்தி நாராயண பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷனே கும்பாபிஷேகம் திருப்பனந்தாள் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.
தஞ்சை மாவட்டம் திருவடை மருத்துவர் அருகே திரு லோகி அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஷீரப்தி நாராயண பெருமாள் கோயில் பல்லாயிரம் ஆண்டு பழமையான வைணவத்தலமாகும். அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் தென்புறம் திருமுடியையும் வடபுறம் திருவடிகளையும் கொண்டு ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையின் மீது கிழக்கு நோக்கிய திருமுகமும் சதுர்புஜங்களும் சங்கு சக்கரதரியாக திருப்பாற்கடலில் சயனித்தவராக காட்சி தருகிறார்.
திருமுகமண்டலத்தின் அருகே ஸ்ரீ தேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் வீற்றிருக்க நாபிக்கமலத்திலிருந்து நான்முகன் எழுந்தருளி உள்ளார். பசுவினுடைய காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி போன்ற பொருள்களுடன் கோடிக்கணக்கான மூலிகைகளின் சாராம்சமும் சேர்த்து செய்யப்பட்டது. இதற்கு பன்மடங்கு சக்தியுண்டு.
அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் திருமாலுக்கு திருமஞ்சனத்திற்க்கு பதிலாக சாம்பிராணி தைலக்காப்பு விஷ்ணு பதி புண்ணிய காலங்களில் நடைபெறுகிறது
அப்போது பெருமாள் மலர் மாலைகளாலும் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்
படுகிறார்.
மேலும் இத்திருக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாக இருப்பதால் வில்வ
இலைகளால் அர்ச்சனை செய்வதும் பாற்கடலில் வீற்றிருப்பதால் பால் சம்பந்தப்பட்ட நைவேத்தியங்கள் செய்வதும் சிறப்புடையதாகும்.
உடையவர்,திருமங்கை ஆழ்வார், தொண்டரடி ஆழ்வார், பொடியாழ்வார், பெரியாழ்வார், மதுரை கவி ஆழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார்,பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள், ஆண்டாள் நாச்சியார் நரசிம்மர், விஸ்வக்ஷேனர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் மகாலட்சுமியின் அவதாரமாக ஸீரநாயகி தாயார், வரதராஜ பெருமாள், கருடாழ்வார், விஷ்ணு துர்க்கை ஆஞ்சநேயபெருமான் உள்ளிட்டோர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி அருள் புரிந்து வருகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வைணவ தளமாக இருக்கும் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார கோயில்கள் திருப்பணி முடிவடைந்து மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த பத்தாம் தேதி பரிவார பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டு இருந்த யாகசாலை மண்டபத்தில் திப்பி ராஜபுரம் ராமன் பட்டாச்சாரியார், கோயில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் சர்வ சாதகத்துடன் நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சைவ ஆதீனங்களில் ஒன்றான திருப்பனந்தாள் ஆதீனம் காசி திருமடஅதிபர் முன்னிலையில் நான்காம் கால யாக பூஜை பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தொடர்ந்து கோவிலின் ராஜகோபுரம் சுவாமி தாயார் மற்றும் பரிவார சந்ததிகளில் விமான கலசங்களுக்கு மகா சம்ப்ரோக்ஷனே கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் திருப்பனந்தாள் காவல்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். 🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருவிடைமருதூர், தஞ்சை.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#திருவிடைமருதூர் #ஷீரப்திநாராயணபெருமாள் #ஸ்ரீதேவி #பூதேவி #மஹாகும்பாபிஷேகம் #கும்பாபிஷேகம் #பெருமாள்கோயில் #வைணவம் #நேரலை #தமிழ்ஆன்மீகம் #Thiruvidaimarudur #SheerapthiNarayanaPerumal #Sridevi #Bhoodevi #MahaKumbabishekam #PerumalTemple #LiveDarshan #TamilTemple #Vaishnavism #OmNamoNarayanaya
