Videos

Sirkazhi Sri Sattainathar Temple Thirukalyana Vaibhavam 2024

சீர்காழி | சட்டநாதர் கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் | திருக்கல்யாண வைபவம் | 2024
#திருவையாறு #குருமகாசந்நிதானம் #தருமைஆதீனம்

Sirkazhi | Sri Sattainathar Temple | Thirukalyana Vaibhavam 2024
#thiruvaiyaru #guru_maha_sannidhanam #dharumai_aadheenam

Date : 20-04-2024

சீர்காழி சட்டநாதர் கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், முத்து சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது .திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வேத விற்பனர்கள் மந்திரம் ஓதி யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிளை அழைப்பு பெண் அழைப்பு மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபத்தை கண்டு களித்தனர்.

Related Articles

Back to top button
Close