பொன்னேரி ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா | Hariharan Sandhippu Peruvizha
🌺🙏 Ponneri Sri Kari Krishna Perumal Temple Hariharan Sandhippu Peruvizha | பொன்னேரி ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா 🌺🙏
📝குறிப்பு :
பொன்னேரி 06.05.26
இந்தியாவில் எங்குமே நடைபெறாத ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளையும் சிவபெருமானையும் ஒருசேர கண்டு களித்தனர்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது.பொன்னேரியின் மையப்பகுதியில் ஆரணி ஆற்றங்கரையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயம் சோழ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டத. சைவ சமயத்தினருக்கும் வைணவ சமயத்தினருக்கும் யார் பெரியவர் என்ற மோதல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர பரத்வாஜ முனிவர், அகத்திய மாமுனி ஆகியோர் கரிகிருஷ்ண பெருமாளும் சிவபெருமானும் ஒருசேர காட்சியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து ஹரியும் ஹரனும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதத்தில் பொன்னேரியின் பிரதான மாடவீதியில் சிவனும் பெருமாளும் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.நீண்ட நெடுங்காலமாக நடந்து வரும் சந்திப்பு திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் சௌந்தரவல்லி தாயாருக்கும் கரிகிருஷ்ண பெருமாளுக்கும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு கரிகிருஷ்ண பெருமாள் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனை தொடர்ந்து கருடோற்சவத்தின் 5ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெறாத ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் ஆனந்தவல்லி தாயார் விநாயகர் முருகர் மற்றும் சன்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வர பெருமான் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சந்திப்பு திடலான ஹரிஹரன் கடைவீதிக்கு வந்தடைந்தார்.இதே நேரத்தில் கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ கருட வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து மேளதாளம் முழங்க அங்கு வந்து சேர்ந்தார்.மிகவும் பிரம்மாண்டமாக கண்ணை கவரும் விதத்தில் வான வேடிக்கை நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து பட்டாச்சார்யார்கள் சிவபெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்து கொடுத்தனர்.இதையடுத்து சிவாச்சாரியார்கள் கரிகிருஷ்ண பெருமாளுக்கு சீர்வரிசை அளித்தனர். விழாவின் உச்சகட்டமாக காலை ஐந்து பதினைந்து மணியளவில் ஹரியும் ஹரனும் பக்தர்களுக்கு ஒன்றாக காட்சியளித்தனர்.அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷமும் நமச்சிவாய, நமச்சிவாய கோஷமும் விண்ணை பிளக்கும் வகையில் அதிர்ந்தது. கோலாகலமாக நடந்த சந்திப்பு பெருவிழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் சிவபெருமானையும் ஒருசேர கண்டு களித்தனர்.பின்னர் சிவனும் பெருமாளும் ஒன்றாக வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சந்திப்பு பெருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் ❤️🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : பொன்னேரி.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#HariharanSandhippu #Ponneri #TempleFestival #பொன்னேரி #Ponneri #கரிகிருஷ்ணபெருமாள் #KariKrishnaPerumal #ஹரிஹரன்_சந்திப்பு #HariharanSandhippu #PerumalTemple #ShivaTemple #TempleFestival #Devotional #வீதியுலா #Veedhiyula #ஆன்மிகம் #TamilTemple #TamilNaduTemples #SouthIndianTemple #SpiritualVideos #HariHara

