
மயிலாடுதுறை – திருவிடைக்கழி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலய வைகாசி சதயத்திருவிழா கொடியேற்றம் | Kodiyetram
🌺🙏 Mayiladuthurai Thiruvidaikazhi Sri Subramaniaswamy Temple Vaikasi Sadaya Festival Kodiyetram | மயிலாடுதுறை – திருவிடைக்கழி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலய வைகாசி சதயத்திருவிழா கொடியேற்றம் 🌺🙏
📝குறிப்பு :
தரங்கம்பாடி அருகே சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்படும் திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருக பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் இன்று
வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு முன்பாக பஞ்ச மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர், ஆடிப்பூர அம்பாள், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள செய்து கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு வைகாசி சதயத் திருவிழா தொடங்கியது .விழாவின் முக்கிய நிகழ்வாக தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் வருகின்ற ஏழாம் தேதி முருகப்பெருமான் இரண்யா சூரனை வதம் செய்யும் நிகழ்வு தரங்கம்பாடி கடற்கரையில் நடைபெற உள்ளது. எட்டாம் தேதி திருக்கல்யாண வைபவம் 10ஆம் தேதி திருத்தேர், பதினொன்னாம் தேதி பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் 🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருவிடைக்கழி, மயிலாடுதுறை.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#VaikasiSadayam #Kodiyetram #SubramaniaswamyTemple #மயிலாடுதுறை #Mayiladuthurai #திருவிடைக்கழி #Thiruvidaikazhi #சுப்பிரமணியசுவாமி #Subramaniaswamy #முருகன் #Murugan #வைகாசிசதயம் #VaikasiSadayam #கொடியேற்றம் #Kodiyetram #MuruganTemple #TempleFestival #TamilTemple #Devotional #ஆன்மிகம் #SpiritualVideos #SouthIndianTemple #FestivalCelebration

