Videos

Thanjavur Sri Peruvudaiyar Temple Ashaada Navarathri Vizha – Day-6 | Thiruvaiyaru

தஞ்சாவூர் | ஸ்ரீ பெருவுடையார் கோவில் | ஆஷாட நவராத்திரி விழா | நாள்-6 | வாராஹி அம்மன் அபிஷேகம் & மாதுளை அலங்காரம் | திருவையாறு

Thanjavur | Sri Peruvudaiyar Temple | Ashaada Navarathri Vizha | Day-6 | Vaarahi Amman Abishekam & Mathulai Alangaram | Thiruvaiyaru

#thiruvaiyaru #dharumai_adheenam #peruvudaiyar #brahadeeswarar #big_temple #thiruvaiyaru #varahi_amman #vaarahi_amman #ashaada_navarathri #navaratri #navarathri #திருவையாறு #தருமை_ஆதீனம் #தஞ்சாவூர் #பெருவுடையார் #பெரிய_நாயகி #வாராஹி_அம்மன் #ஆஷாட_நவராத்திரி #பெரிய_கோவில் |2024

குறிப்பு :

தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்
10.07.2024

ஆசாட நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று வராகி அம்மனுக்கு மாதுளை அலங்காரம். திரளான பக்தர்கள் நீண்ட வரிசைகள் என்று சுவாமி தரிசனம்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் ஆசாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆசாட நவராத்திரி விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் இனிப்பு அலங்காரமும், இரண்டாவது நாள் மஞ்சள் அலங்காரமும், மூன்றாவது நாள் குங்குமம் அலங்காரமும், நான்காவது நாள் சந்தனம் அலங்காரமும், ஐந்தாம் நாள் தேங்காய் பூ அலங்காரமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆறாம் நாளான இன்று மாதுளை அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Articles

Back to top button
Close